இது என் நூற்றி ஒன்றாவது பதிவு!

எல்லாவற்றையும் முயற்சிப்பது போல் தான் வலைபதிய ஆரம்பித்தேன். எதுவாய் இருந்தாலும் சீக்கிரம் அலுத்து விடும் எனக்கு வலைபதிவது இன்னும் அலுக்கவில்லை! ஆச்சர்யம் தான். குறும்பு செய்யும் கிருஷ்ணனை கட்டிப் போட்ட யசோதையை போல் வலைப்பதிவு என்னை இன்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது! [ஏதோ ஒரு உவமை இருந்தால் தான் பெரிய எழுத்தாளர் போல் இருக்கும் என்று எழுதிய உவமை; நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்!]

சரி, நூறு பதிவுகளை வெற்றிகரமாய் எழுதியாகிவிட்டது. கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம், ஓவியம், திரைக்கதை, சொந்த அனுபவம் என்று எல்லா வகையிலும் எழுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை எழுதும் போதும் நம்மிடம் சரக்கு தீர்ந்து விடுமோ என்று எழுத்தாளனுக்கே உரிய பயம் வரத் தான் செய்கிறது! [ இங்கு எழுத்தாளன் = பிரதிப், அதாவது அடியேன்!] இப்போது இந்த பதிவில் ஒரு விபரீதமான முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன். காதலை வித விதமாய் சொல்லியாகிவிட்டது. காமத்தை பற்றி ஏன் சொல்லக் கூடாது? காமத்தை பற்றி பேச்சு எடுத்தாலே "கத்தி மேல் நடப்பது" என்ற சொற்றொடர் கண்டிப்பாக வர வேண்டும்! அப்போது தான் அதற்கு மதிப்பு! இதோ நானும் கத்தி மேல் நடக்கப் போகிறேன்.

இது வரை வலைபதிவில் இப்படிப் பட்ட முயற்சிகள் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சரி இதை மட்டும் ஏன் விட்டு வைப்பானேன்! இதோ! படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------


வழக்கமான இரவு! வட்டமான நிலவு. அவர்கள் கதவை மூடாவிட்டால் இன்னும் சற்று நேரத்தில் முகம் சிவந்த நிலவைத் தான் நாம் பார்க்க முடியும். ஆம்..கனவில் ஊர் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் காதலில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கின்றன இரு இதயங்கள்! காதலின் விளைவால் உண்டான காமத்தின் தாளத்தில் துடிக்கிறது அவர்களுடைய இதயம். விளக்கு அணைந்திருக்கிறது; அவள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறாள். அவளின் வெளிச்சத்தில் உயிர் வாழப் போகும் மின்மினிப் பூச்சியாய் அவன் இருக்கிறான். சத்தம் செய்யாத அந்தப் பெரிய தேக்குக் கட்டிலில் நிறைய இடம் விரயமாகி இருக்கிறது. இருவரில் யார் நதி, யார் கடல் என்று தெரியவில்லை..ஆனால் ஒரு சங்கமம் தொடங்க இருக்கிறது! எங்கிருந்தோ கேட்கும் வீணையின் இசை அந்தச் சங்கமத்திற்கு மேலும் அழகூட்டுகிறது!

அவனும், அவளும், காதலும், காமமும் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்கள்! நதி மூலம் தேடுவது போல் அவன் ரதி மூலம் தேடத் தொடங்குகிறான். அவளுடைய அவிழ்ந்த கூந்தலின் ஊடே அவளுடைய ஒளிர்ந்த முகத்தை பார்க்கிறான். தென்னங்கீற்றின் வழியே பெளர்ணமி நிலவை போல் பிரகாசிக்கிறாள் அவள்! சிரிக்கிறாள் அவள், சிதைகிறான் அவன்! அவனுடைய விரல்கள் கூந்தலிலிருந்து விடுபட்டு மேல் நோக்கி முன்னேறுகிறது. அவள் நெற்றி தடவினான் முதன் முறையாக..அவள் உயிர் தடவப்பட்டது புரியாமல்! அவளுடைய நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு அவளுடைய அத்தனை வெட்கத்தையும் திரட்டி வைத்தது போலிருந்தது. இரு கரிய வானவில்லை ஒத்த புருவத்தில் அவன் விரல்கள் இறங்கின..நிலவை மேகம் மறைத்தது போல், விழியை இமை மறைத்திருந்தன..மூடிய விழிகள் துடிக்கின்றன..முத்தம் கொடுத்து அமைதி படுத்துகிறான். இமைகளின் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் இதயத்தின் மேல் அவன் கரம் பதித்தான். கன்னங்களில் அவன் தடம் பதித்தான். அவளுடைய கரங்களைத் தடவி அவள் விரல்களில் தன் விரல் கோர்த்தான். விரல்களின் நடுவில் இருந்த இடைவெளிக்கு அர்த்தம் கண்டான்! அவன் ஸ்பரிசம் பட்டதும் அவள் கூசி, குறுகி ஆனந்தித்தாள்! அவளின் மொத்தமும் அவனுடைய கைக்குள் அடங்கி விடுவது போல் சுருங்கிப் போனாள்..உடல் உடலை உரசுகிறது; உயிர் உயிரை உரசுகிறது. பெண்மை என்னும் வெள்ளம் கரை புரண்டு, ப்ரவாகம் எடுத்து ஓடத் தொடங்குகிறது. அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளிக்கிறான். அவன் சொல்லித் தருகிறான். அவள் அள்ளித் தருகிறாள். பசித்திருக்கிறான், அவளை ரசித்திருக்கிறான்..அதோடு ருசித்திருக்கிறான்!!

அவளின் ஆடை கலைக்கிறான், அவளின் வெட்கம் கலைந்து விடாமல்! அவளின் உடலை ஆய்கிறான். எத்தனை வளைவு, எத்தனை நெளிவு, மேடுகள், பள்ளங்கள், இருள், வெளிச்சம், இன்பம், துன்பம்...வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் கொண்டுள்ளது பெண்ணின் தேகம். தாகமெடுத்துப் போராடும் ஒருவனின் முன் சுவையான நீர் சுனை ஒன்று தென்பட்டால், அள்ளி எடுக்க எப்படி இரு கைகள் போதாதோ அதே போல் அவளின் அத்தனை அழகுகளையும் அள்ளிப் பருக இரு கண்கள் போதாமல் தவிக்கிறான். அவள் அதை விழி மூடிய கைகளினூடே ரசிக்கிறாள். அவள் இரு கைகளையும் எடுத்து விரித்து, அதில் தன் கைகளைக் கோர்த்து அவளின் மேல் அமர்ந்து கொள்கிறான். வெட்கத்தில் அவள் முகத்தை மூட வழியில்லாமல் வடப்புறமும் இடப்புறமும் திரும்பித் துடிக்கிறாள்! சற்று இடைவெளி விட்டு, அவளுக்கு நேரம் தந்து..அவளின் இதழ் பதிக்கிறான்.

அவளுடைய மார்புகள் அவனின் மார்பில் பட்டு நசுங்கி உருவம் பிசகுகின்றன. கீழ் நோக்கிப் பாயும் நீர் போல், அவள் இதழ் சுவைத்துக் களைத்து கழுத்தில் விழுகிறான். பல செல்லக் கடிகள் கடித்து, அவளை மோகித்து இம்சிக்கிறான். பல முறை கசங்கிப் போன தென்றல் அனுபவ பாடம் கற்று காதலர் வழி புகாமல் வேறு திசை நோக்கிச் சென்று விட்டது. கழுத்தைச் சுவைத்து மயங்கிக் கிடப்பவள் காதில் மெல்லச் சொல்கிறான், "உப்புக் கரிக்கிறாய்! ரோசக்காரி தான்" என்று! அவள் சினுங்கிச் சிரித்த அடுத்த நொடி பல்லில் முத்தம் வைத்தான். அதிர்ந்து அவள் வாய் மூட நினைத்தது பலித்தது என்று வாய் பிரிக்காமல் அவள் இதழ் பறித்தான்! மெல்ல எழும்பி அவளிடம் கோர்த்த கைகளை விடுத்து கைகளுக்கு வேலை கொடுக்கச் சித்தமானான். மோதிரம் போடுவதற்கென்றே விரல்கள் என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு இரு கைகளாலும் அந்த மோகனத்தின் மார்பு பிடித்தான். மேகங்களில் காற்று மோகித்துப் படும் போது மழை பெய்வதை போல், அங்கு அவளின் பெண்மை துளிர்த்து எழுந்தது, அவன் மேல் விழுந்தது. உலர்ந்த திராட்சையை ஒத்த அவளின் முலைக் காம்புகளை தன் முத்த மழையில் நனைத்தான்! அதில் அவனும் நனைந்தான்.

அங்கிருந்து சற்று இறக்கத்தில் இருக்கும் அவளின் தொப்புளில் தான் தன் உமிழ் நீர் சேகரித்தான்! முற்றத்தில் ஒரு மழை நாளில் இருக்கும் சிறு செப்புக் குடம் ஒன்று நிரம்பி வழிந்தது போல் வழிகிறது அவன் எச்சிலில் அவளது தொப்புள்! தொப்புள் கடிக்கும் அவனை மெய்மறந்து தலை கோதுகிறாள். அழுத்திக் கொள்கிறாள் இன்னும். அவனின் நாக்கு தொப்புள் வழியுனூடே அவள் முதுகு துளைக்கிறது. மூச்சு முட்ட, எச்சில் தீர மெதுவாய் எழுகிறான். காதலாய்ச் சிரிக்கிறான் அவள் கண்களைப் பார்த்து. மோகத்தில் அவள் உதடு துடிக்கிறது.

சற்றே மேலெழும்பி காதலின் கடைசி கட்டத்துக்கு ஆயுத்தமாகிறான். அவனை வார்த்தெடுப்பதற்காக அவளின் பெண்மை விரிந்திருக்கிறது. துடித்திருக்கும் ஆண்மையை அது அழைப்பதைப் போலிருக்கிறது. தன்னுடைய அந்தரங்கத்தை, அடையாளத்தை, அலுங்காமல் அதனுள் செலுத்துகிறான். அது உறைக்குள் புதிய வாள் ஒன்று செல்வது போல் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அத்தகைய நீர் சுரந்து ஆண்மைக்கு வழி விட்டு இன்பம் காண்கிறது பெண்மை. இயங்கத் தொடங்குகிறான். அவள் மயங்கத் தொடங்குகிறாள். கண்களை மூடி ரசிக்கிறாள், தன்னுடைய கற்பு கரைபடுவதை. முனகுகிறாள், அவன் மேலும் முறுக்குகிறான். ஆணில் சற்றே பெண்மையும், பெண்ணில் சற்றே ஆண்மையும் கலக்கிறது, தங்கத்தில் செப்பு கலப்பதைப் போல..இறுதியில், இரு உடல் கொண்ட இயக்கத்தின் பலனாய் அவன் அவளுள் தன் உயிர் துளிகள் தூவினான். பிறந்து, வளர்ந்து, காத்து வந்த ஆண்மையின் சில துளிகளை உழைத்துக் களைத்து அவளுள் சேமித்து வைக்கிறான், எப்படியும் பத்து மாதங்களில் இழந்த அந்த உயிர் துளிகள் வட்டியுடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்! சோர்ந்து சரிகிறான் அவள் மேல்..காமம் வடிந்து விட்டது அவன் கண்ணில்; காதல் அல்ல!!

காலந்தோரும் அவர்களுடைய புணர்வு தொடரும்..அவர்களுள் காதலும் காமமும் ஓங்கி இருக்கும் வரை!


27 Responses
  1. Anonymous Says:

    //வர்த்தெடுப்பதற்காக //

    வார்த்தெடுப்பதற்காக


  2. அன்பு பிரதீப்,அருமையான பதிவு.

    வார்த்தைகளும்,வர்ணனைகளும் வரம்பு மீறாமல் உள்ளது.

    கணவன்,மனைவிக்கிடையே உள்ள
    காதல்தான் தெரிகிறது.காமம் இல்லை.

    அன்பு,பாசம்தான் அதிகமாக தெரிகிறது.
    ஆபாசம் இல்லை.

    சோதனைப்பதிவு என்றாலும்
    சுத்தமான பதிவு.

    கத்திமேல் நடந்தாலும் மிகவும்
    கவனமாக நடந்துள்ளீர்கள்.

    பதிவகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.


  3. எழுத்துப் பிழை,

    திருத்திக் கொண்டேன். காதலில் தமிழ் தடுமாறிவிட்டது! :)

    ராஜா,

    தங்கள் பாராட்டுக்கு நன்றி!


  4. G.Ragavan Says:

    நல்ல வருணனை. அருவெறுப்பு இல்லாமல் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக நன்று.


  5. Sivakumar Says:

    101kku paarattu.

    Nalla karpanai, ovvoru karpanaikkum pala karanangal irukkum. ithu etharkaga vanthathu enru yaarukkum teriyavillai enralum unakku terinthirukka vendum.

    Un rasanaiyai aanin kannil irunthe paarthirukkirai. Pennin kannil irunthu paarthu paar. innum swarasiyam koodum.


  6. ரெம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்..


  7. mouls,

    innum appattama ezhuthanumnu nenachen :)

    Ragavan,

    மிக்க நன்றி

    சிவகுமார்,

    நன்றி

    சிறில்,

    நன்றி


  8. Anonymous Says:

    Pradeep,

    You article was too good.But After reading your blog i felt like seeing a movie directed by stephen spielberg with ramarajan as hero (And Ramanarayanan as a director and tom cruise as hero ...for the sake of vice versa).I'm worried that you may loose some audience..not me ofcourse..


  9. Anonymous,

    Thanks! actualla neenga enna solla varreengannu velakkama sonna nalla irukkum!


  10. Anonymous Says:

    பொண்ணுங்க யாரும் கமென்ட்டு குடுக்கலையே!
    நல்ல முயற்சி. ஒரு ஆணின் எண்ணக் கோர்வை, கற்பனை வெள்ளம், அத்தனையும் அழகாய் இருக்கிறது. இது கற்பனை கொஞ்சம், நிஜம் கொஞ்சம் இருக்கலாம். ஏன்னா, நிஜத்தில நிறைய காமடி நடக்கும். கைய மிதிச்சிருவோம், வெயிட்டு அமுத்தீரும், etc...
    நிஜ காமம், அருமையான ஆக்ஷன் காமடி நிறைஞ்சு இருக்கும்! ஏ ஜோக் இல்லங்க. சும்மா சார்லி சாப்லின் மாதிரி நிறைய காமடி நடக்கும். அட்லீஸ்ட் முதல் கொஞ்ச நாளாவுது. நல்ல நட்புள்ள தம்பதிகளுக்கு அதுவும் ஆனந்தம் சேர்க்கும்.
    மற்றபடி நல்லா எழுதி இருக்கீங்க. ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் தரும் ஆணின் இயல்பான காமமாக அழகாக எழுதி இருக்கீங்க. பொண்ணு என்ன நினைக்கிறான்னு யோசிக்கலை. அது முக்கியமில்ல இப்பம். உங்க பார்வையே நேர்மையா, நல்ல கவிதை நயம் கொண்ட காமமா இருக்கு.
    அந்த "ராமராஜன்"ன்னு சொல்ற அனானி வெறும் பெனாத்தல் - பொறாமை பிடிச்ச பயலா இருப்பான்.
    நான் பொண்ணு சொல்றேன், நல்லா எழுதிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
    அப்படியே செய்யுங்க. அப்பப்ப "நல்லாருக்கா?, வேற என்ன வேணும்"ன்னு கேளுங்க காதலி கிட்ட. அது போதும். வாழ்த்துக்கள்.


  11. ENNAR Says:

    பிரதீப்
    ம் பராவயில்லை


  12. //சில துளிகளை உழைத்துக் களைத்து அவளுள் சேமித்து வைக்கிறான், எப்படியும் பத்து மாதங்களில் இழந்த அந்த உயிர் துளிகள் வட்டியுடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்!//

    கத்தி மேல் நடப்பதாகச் சொல்லிவிட்டு, கவிதை மேல் நடந்து விட்டீர்களே...மிக அருமை. ஒரு request. இதையே கவிதையாகவும் வடித்துப் பாருங்களேன், முடிகிறாதா என்று! அவ்வளவு வர்ணனையும் வேண்டும் என்பதில்லை. உருக்கமான பகுதிகள் மட்டும் போதும்.

    //ஆணில் சற்றே பெண்மையும், பெண்ணில் சற்றே ஆண்மையும் கலக்கிறது, தங்கத்தில் செப்பு கலப்பதைப் போல//
    இரு பாலர் நிலையில் இருந்தும் எழுதியுள்ளீர்கள். காமம் பாதி, கண்ணியம் பாதி! வாழ்த்துக்கள் ப்ரதீப்!


  13. Anonymous Says:

    Hai pradeep,
    KEEP IT UP.
    after a long gap i have read these type of short story. you have a good flow everywhere in writing. two years back i read a story which was written by S.R.S. (in Teeranathi) And that story entered in my heart - so that i can explained each & every line of that story. Also, these type of stories comes regularly in Literal type mazagines - teeranathi, puthiya parvai, uiyer mei... Charu Nivetitha, S.R.S., Manushiya puthran & few few writers have a very nice & gentle flow in their porne writing. Now, you have a seat nearer to them. Once again, keep it up.
    bye
    yours,
    Siva


  14. Anonymous Says:

    Hai pradeep,
    KEEP IT UP.
    after a long gap i have read these type of short story. you have a good flow everywhere in writing. two years back i read a story which was written by S.R.S. (in Teeranathi) And that story entered in my heart - so that i can explained each & every line of that story. Also, these type of stories comes regularly in Literal type mazagines - teeranathi, puthiya parvai, uiyer mei... Charu Nivetitha, S.R.S., Manushiya puthran & few few writers have a very nice & gentle flow in their porne writing. Now, you have a seat nearer to them. Once again, keep it up.
    bye
    yours,
    Siva


  15. anonymous ponnu, [உங்க பேரை சொல்லியிருக்கலாம்!]

    ஆமாம், ஒரு பையனாய் என்னுள் எழுந்த கற்பனையை தான் வடிக்க முடிந்தது. இதுவே ஒரு சவாலாகத் தான் இருந்தது. இதில், ஒரு பெண் போல் கற்பனை செய்வது இதை விட சவாலாகத் தான் இருக்கும். அப்படி ஏதாவது எதிர்காலத்தில் தோன்றினால் கண்டிப்பாக எழுதுவேன்.

    //அப்பப்ப நல்லாருக்கா? வேற என்ன வேணும்?ன்னு கேளுங்க காதலி கிட்ட. அது போதும்.//

    இது என் க(வி)தைக்கு மேலும் அழகூட்டுகிறது. கண்டிப்பா நீங்க சொல்றபடி செய்றேன் :)

    எண்ணார்,

    ம் நன்றி :)

    ரவி,

    கதை தான் எழுத ஆரம்பித்தேன். அது க(வி)தையாய் மாறி விட்டது. ஏதோ ரசிக்கும்படியாய் இருந்தால் சரி தானெ..

    நீங்கள் சொல்வது போல் இதை கவிதையாய் வடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை!

    நீளமாய் எழுதினால் கதை..
    அடுத்தடுத்து எழுதினால் கவிதை!! :)

    சிவா,

    ஐய்ய்யோ, என்னங்க நீங்க எல்லா பெரிய ஆளுங்களோட பேரை சொல்லிட்டு எனக்கு அவங்க பக்கத்துல சீட் இருக்குன்னு சொல்றீங்க..நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. [கண்டிப்பாய் தன்னடக்கம் இல்லை;உண்மை!] தங்கள் வாழ்த்துக்கு நன்றி!


  16. Anonymous Says:

    Hi Pradeep,

    Arumaiyana pathivu...

    வாழ்த்துக்கள்...

    Thiru


  17. நன்றாகவே கத்திமேல் நடந்திருக்கிறீர்கள். காயம் எதும் இருப்பது போல் தெரியவில்லை.


  18. இதற்குப் பிறகு இரண்டு பதிவு போட்டாகிவிட்டது. நீங்கள் இப்போது தான் இதை படிக்கிறீர்களா? எப்படியோ தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!


  19. கத்தி மேல் நடந்துள்ளீர்களா இல்லை காமத்தின் மீது நடந்துள்ளீர்களா என சந்தேகமாக உள்ளது.

    ஆபாசம் கலக்காத எழுத்து நடை. பாராட்டுக்கள்


  20. காமத்தின் கத்தியால் காயங்கள் உண்டாவதில்லை..


  21. flashmani Says:

    அட!..நல்லா இருக்கு...உச்சகட்டத்தை இன்னும் கொஞ்சம் மென்மையா சொல்லியிருக்கலாம்...


  22. A great post on celebration of your century.

    Good flow. Why don't you try on some scentific stories like "Sujatha".


  23. siva,

    thanks..

    scientific storya? try panniduvom!


  24. Anonymous Says:

    100vadu padam...pala periya nadigargal, directorgal kooda sodappi irukkiraargal... nee kelappeete... T.S. maadiri sollanumna.. It was A.M.A.Z.I.N.G

    Kuzhandaigalukkaga nee eludi irukkraya?? illavittal try sei.. unakku sarva saadaranama varum...


  25. Anonymous Says:

    ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க... I was reminded of the small narration... உன்னோடு நானிருந்த ஒவ்வொரு.. from iruvar.



  26. Anonymous Says:

    good job. nice narration.