காதலி..
நான்
நடைமுறைக் காதலன்

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்

ஆம்
நான் நடைமுறைக் காதலன்

i just can't stop recommeding this blog to all illayaraja fans!
Amazingly written!
http://isai-alias-raja.blogspot.com/
இதே பிரச்சனை யின் காரணமாக...இன்று இரு கவிதைகள் மட்டும்!

யாருமில்லாத கடற்கரையில்
வந்து வந்து போகும் அலைகள்..
யார் காலை நனைக்க!

[இன்று திருவான்மியூர் கடற்கரையில் உதித்தது!]

பெளர்ணமி மட்டுமல்ல
பிறை நிலவும் அழகு தான்..
ஜன்னலின் வழியே உன் முகம்!

[2வது கவிதையின் முதல் இரு வரிகளை நான் எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளது! யாருக்காவது தெரியுமா?]