வெரும் வெள்ளைத் தாளாகவே
கொடுத்திருப்பேன்

அதில் நிரம்பி இருக்கும் என் காதல்
உனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?

அந்த வெற்றிடங்களும்,
சொல்லப்படாத சொற்களும்
உணர்த்தாத காதலையா
இந்தக் கவிதைகள்
உணர்த்தி விடப் போகிறது!

உன்னை சொல்லிக் குற்றமில்லை;
சமூகத்தில், காதலுடன் ஒட்டிப் பிறந்த
குழந்தையாய் இருக்கிறது கவிதை

காதலை விட்டு கவிதையையும்
கவிதையை விட்டு காதலையும்
பிரித்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை!

காதலிப்பவனெல்லாம் கவிஞனா?
அல்லது கவிஞர்கள் தான் காதலர்களா?
எனக்குப் புரியவில்லை

எப்படியோ சமூகச் சம்பிரதாயத்தின் படி
தாளின் இந்தப் பக்கத்தில் என்
தூங்கா இரவின் பிதற்றலும்,

இன்னொரு பக்கத்தில் நானும்
என் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கிறோம்
உனக்காக..வெறுமையாய்!
2 Responses
  1. Anonymous Says:

    hmmmmmmmmm, no idea


  2. Karthigeyan Says:

    அருமையான சொற்கள்
    சொல்லாத சொற்கள்!