வணக்கம்பா...இன்னா? எல்லாரும் ஷோக்கா கீறீங்களா? ரொம்ப நாள் ஆச்சா ஒங்கள பாத்து, ஒரே ஃபீலிங்கா கீது..அல்லாரும் நல்லா இருந்தா சர்தான்!

என்ன ஒரு மூன்று மாதம் இருக்குமா நான் வலைபதித்து? இந்த இடைபட்ட காலத்தில் என் பதிவுகளைக் காணாமல் கிட்டத்தட்ட 2000, 3000 பேராவது [இங்கு பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை!] யாஹு அணைந்த கோட்டின் வழியே என்னையும் என் பதிவுகளைப் பற்றியும் நலன் விசாரித்திருந்தார்கள். அனைவருக்கும் என் நன்றி! றி! றி!!

சரி சென்னையே மழையால் நனைந்து வாடிக் கொண்டிருக்கும்போது, நாமும் சேர்ந்து ஏன் சொத சொதப்ப வேண்டும் என்று சும்மா இருந்தால், சென்னையில் மழைக் காலம் என்பது நிரந்தரம் ஆகிவிட்டதோ என்ற அளவுக்கு பெய்து கொண்டே இருக்கிறது..அது சரி, எஙலை [இங்கு எங்கள் என்பது என் தம்பியை குறிக்கும்] போல் நல்லவர்கள் இருந்தால் மழை வரத் தானே செய்யும்! சரி ஒரேடியாய் கொட்டுதே என்று நேற்று தான் அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டேன்..

சரி விஷயத்துக்கு வருகிறேன்..ஆபிஸில் ஒரே உழைப்பு, உழைப்பு என்று இருந்ததால், எங்கள் மீதும் கொஞ்சம் இரக்கப்பட்டு நேற்று வெளியே [அவுட்டிங்காமா, அட்டகாசம் தாங்கல] கூட்டிச் சென்றார்கள். ம்ம்..அதே தான். ஈசிஆர் ரோடு என்று போட்டாலும் போட்டார்கள், ரோடின் ஒரு பக்கம் எல்லாம் பீச் ரிசார்ட் தான்! களை கட்டுது..நாங்கள் சென்றது ஃபிஷர்மென் கோவ்!

மனநலம் சரி இல்லாதவர்களை எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை குற்றாலத்திற்கு கூட்டிச் செல்வது போல் எங்களையும் டிசர்ட் யுனிஃபார்ம் மாட்டி கூட்டிச் சென்றார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் போவது வேனில், நாங்கள் போவது பர்வீன் ட்ராவல்ஸ் பஸ்ஸில், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகம் வித்தியாசம் தெரியாது..நல்ல வேளை யாரும் சலபுலசலபுல கும்தலக்கா போடவில்லை! [இதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்!?]

வழக்கம் போல் அடுத்தவர்களை ஓட்டி சிரிப்பு வராமல் சிரித்துக் கொண்டிருந்தோம். டிஜிட்டல் காமெராவிற்கு சிரித்தோம்..இந்த மாதிரி இடத்திற்கு ஒரு டிஜே வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது சரி தான்..அந்த ட்ரூப்பில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்? அட, என்ன இது? எல்லாம் நீங்க நினைச்சுட்டா நான் என்னத்தை தான் சொல்றது..சரி சரி, கொஞ்சம் ஒன்னும் நினைக்காம ஊ கொட்டி கேளுங்க..

இருந்தா..உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், விவேக் ஒரு படத்தில் சொல்வது போல் நாம் உள்ளே போட்டுக் கொள்ளும் ஒரு முன்டா பனியன், அது வேறு ஒரு அங்குலத்துக்கு இடுப்பை காட்டியது..சின்ன முடியில் போனிடெய்ல், என்ன இங்கிலீஷ் பாட்டு போட்டலும் இடுப்பை வெட்டி வெட்டி பாடிக் கொண்டிருந்தாள். அவள் தான் நேற்று நிகழ்ச்சி நடத்த வந்த தொகுப்பாளினி! ஆபிஸில் இருந்தவர்களையே பார்த்து பார்த்து வாடிப் போயிருந்த எங்களுக்கு ஜொள்ளிக் கொள்ள ஒருத்தி கிடைத்தாள்!

முதல் பாதி பல விதமான விளையாட்டுகளை விளையாடி அவுட்டிங் வந்த கடமையில் பாதியை நிறைவேற்றினோம். பிறகு மதிய சாப்பாடில் ஓடுவன, பறப்பன, நீந்துவன என்று ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று உட்கார்ந்தால், மேனேஜர்கள் கையில் மைக்! பிறகென்ன, நாங்கள் இந்த ஆண்டு, இதை செய்தோம், அதை செய்தோம் என்று எங்களை கை தட்டச் சொன்னார்கள்! ஹிஸ்ட்ரி ஜாக்ரஃபி பீரியட் மாதிரி தூங்கி வழிந்து கொண்டே கை தட்டினோம். பிறகு ராப்பகலாய் வேலை பார்த்தவர்களுக்கு அவார்ட் கொடுத்தார்கள். அதில் அடியேனும் ஒருவன். [இப்போ புரியுதா ஏன் வலை பதியலைன்னு?] நீ ரொம்ப நல்ல வேளை பாத்தப்பா, தெனம் ராத்திரி 2 மணிக்கு போற, இப்போ அவார்ட் எல்லாம் கொடுக்குறோம்ல? தெனம் 3 மணிக்கு தான் வீட்டுக்கு போவனும் என்ன? சரியா? என்று ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். ஒரு வழியாய் எல்லாம் ஒய்ந்து முடிந்து மைக் எங்கள் நாயகியின் கையில் போனது, ஆட்டம் பாட்டம் ஆரம்பம்!

சரி அவார்ட் வாங்கின சந்தோஷத்தில் நானும் ஒரு குத்தாட்டம் போட்டேன். திடீரென்று மியுசிக்கை நிறுத்தி இந்தக் கூட்டத்தில் மிக அருமையாக ஒருவர் ஆடுகிறார், உங்க பேர் என்ன என்று என்னிடம் கேட்டது அந்த பட்சி! பிரதீப், என்று காத்து தான் வந்தது..மைக் இருந்ததால் கொஞ்சம் கேட்டது..உங்களுக்கு மட்டும் இந்தப் பரிசு என்று கையில் ஒரு டப்பாவை தினித்தாள். ஜோரா ஒரு தடவ கைய தட்டுங்க என்றாள்! இப்போ போட்ற மியுஸிக் உங்களுக்கு மட்டும் என்று ஏக், தோ, தீன் பாட்டை போட்டு என்னை ஆடச் சொன்னாள்! நான் தான் தரையிலையே இல்லையே, சுத்தி ஒன்னும் தெரியலை..இஷ்டத்துக்கு இன்னொரு ஆட்டம்!

வழக்கமாய் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் என்றால் யாராவது என்னை இழுத்து விடாமல் நானாய் போய் ஆட மாட்டேன். நேற்று தான் யார் என்ன நினைத்தாலும் நான் ஆட வேண்டும் என்ற ஒரு முடிவுடன் இருந்தேன். அந்த ஆட்டத்திற்கு முன் என்னை அங்கு வந்திருந்தவர்களில் பாதி பேருக்கு கூட தெரியாது. அந்த ஒரு நிமிடத்தில் என்னை அவள் பிரபலமாக்கி விட்டாள். அடுத்த நிமிடம் யாரென்றே தெரியாத பலர் எனக்கு கை கொடுத்தனர். முதுகில் தட்டிக் கொடுத்தனர். எல்லோருக்கும் எப்படியோ, பிரபலமாய் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு மயக்கம் உண்டு! என்னால் அப்படி ஆக முடியும் என்று நம்புகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்!!

கலாம் அவர்கள் சொல்வது போல், கனவுகளை நம்புபவன் நான்! நீங்கள்?

1 Response
  1. Sivakumar Says:

    Congrats!

    Prabalam aanale problem aarambicchudum. Keep it yourself safe!