நான் முடி வெட்டி 9 மாதங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நேருமல்லாத சுருட்டையுமல்லாத முடி. அதாவது, சிறிதாக வெட்டி இருந்தால், நேராக இருக்கும். வளர்ந்து விட்டால் சுருண்டு கொள்ளும். எனக்கு நிறைய முடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை! உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்டால், கீழ் வரும் அனுபவங்கள் அதற்கு பதில் சொல்லும்!

சென்னையில் இருப்பவர்கள் வெயில் தாழாமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் வெட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் [சில சினிமா நடிகர்களைத் தவிர - இவர்களுக்கு எப்படித் தான் அத்தனை சீக்கிரம் அவ்வளவு முடி வளர்கிறதோ, எனக்குப் புரியவில்லை!] என்னைப் போல சிலரும் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னிருக்கும் முடியை சரியாக இழுத்து விட்டால், என் உதட்டை தொடுகிறது. அதனால் அம்பி மாதிரி மேல் வாரியாக இழுத்து வாரிக் கொண்டு தான் எங்கும் செல்கிறேன். ஏற்கனவே எனக்கு நெத்தி என் உள்ளத்தை போன்றது..அதான்..பரந்து விரிந்தது!

என் முன் வழுக்கை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நான் எப்போது தூக்கி சீவ ஆரம்பித்தேனோ, அன்று முதல் எனக்கு பல விதமான அனுபவங்கள்.

1. சுஜாதாவை சந்திக்கச் சென்ற அன்று சுரேஷ் என்னிடம், நீங்கள் நாடக நடிகரா? உங்கள் ஹேர்ஸ்டைலைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றார்.

2. ஆஃபிஸில் லிப்ஃடில் சென்று கொண்டிருந்த என்னிடம், யாரென்றே தெரியாத ஒருவர், "ஸோ யு ஆர் ட்ரையிங் டு பி ரெமோ?" என்றார். தலையை கலைத்துக் கொண்டு சிரித்தேன். நல்ல வேளை அவர் இறங்கும் இடம் வந்து விட்டது.

3. தலையை கலைத்து ஒரு மாதிரி சிரித்தால், சிறு குழந்தைகள் பயந்து தன் அம்மாவைக் கட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எங்கள் தெருவில் "நீ மட்டும் சாப்பிடலை, பிரதீப் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்" என்று தாய்மார்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

4. ரோட்டில் அனைவரும் ஒரு தடவைக்கு இரு தடவை என்னைப் பார்க்கிறார்கள். நான் அடிக்கடி தலையை சிலிர்த்து அலட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் என்னைக் கடக்கும் போது, ஐ! அந்நியன் போறாருடா என்கிறார்கள். தெருவில் சற்று நேரம் நின்றால், அங்கு விளையாடும் குழந்தைகள் "ஹேய் ரெமோ" என்கிறார்கள்!விக்ரமுக்கு என்னை விட வயது அதிகம். அவரின் பெயரைச் சொல்லி என்னை அழைப்பதால் எனக்கு ஒன்றும் சந்தோஷம் இல்லையென்றாலும் [இது ரொம்ப ஓவர் தான்!], அந்தக் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன.

5. அன்று ஒரு கையில் டைரியுடன் ஒரு ப்ரவுசிங் சென்டரில் தேசிகன் வலைப்பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த கஃபேக்கு சொந்தக்காரர் என்னை நெருங்கி, நீங்க எழுத்தாளரா என்று கேட்டார்? எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை! ஏன் கேட்கிறீர்கள் என்றேன்? இல்லை இந்த மாதிரி சைட் எல்லாம் பாக்குறீங்களே? என்றார். உங்க பேர் என்ன என்றார்? பிரதீப் என்றேன், புனைப்பேர் இல்லையா என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். தொடர்ந்து, என் கவிதைகள் கனையாழியில் வந்திருக்கிறது என்று ஒரு போடு போட்டார்! உண்மையான எழுத்தாளர்!!

6. ஹோட்டலில் என் தம்பியுடன் சாப்பிடச் சென்றேன். ஆர்டர் வாங்க வந்தவர், நான் சொல்வதைக் கேட்காமல் என்னை இடைமறித்து, உங்களைப் பாத்தா ரயில் பயணங்கள்ல வர்ற சுதாகர் மாதிரி இருக்கு சார் என்றார். உடனே நான் "எப்படி" என்று என் தம்பியை எகத்தாளமாய் பார்த்தேன். அவன் என்னை புழு பூச்சியை விடவும் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தான். நானும் சளைக்காமல் ரயில் பயணங்கள்ல சுதாகர் இல்லையே என்று என் சினிமா அறிவை வெளியிட்டுக் கொண்டேன். அவர் அசடு வழிந்து அந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் நிறுத்தி அது கிழக்கே போகும் ரயில் என்றேன். அவர் அதோடு நிற்காமல், எரியும் நெருப்பிடம், அதாவது என் தம்பியிடம் நீங்க இவர் கூடையே இருக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரிய வாய்ப்பில்லை என்று விளக்கம் வேறு. என் தம்பி இனிமே இவன் கூட வரக்கூடது என்று முடிவு கட்டி விட்டான் என்று எனக்குப் புரிந்து விட்டது!

7. என்னுடைய ப்ராஜக்ட் லீடர், என் தலையை பார்த்தே பேசுவார். ஹலோ என் கண்ணைப் பாத்து சொல்லுங்க என்று ரஜினி/விக்ரம் ரேஞ்சில் டயலாக் விடுவேன். அவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

8. என் பழைய ஐடி கார்ட்டை பார்த்து நண்பர்கள், இவ்வளவு நல்லா இருந்துருக்கியேடா? என்றால், கொஞ்ச நாள் அசிங்கமா இருக்கலாம்னு பாக்குறேன் என்று பீத்திக் கொள்வேன் [இனிமேல் கேட்பார்கள்?]. இதன் மூலம் நான் கற்ற பாடம், நீங்கள் அழகு என்று யாராவது சொல்ல வேண்டுமா? இருப்பதை விட கேவலமாய் மாறி விடுங்கள்..தோற்றத்தில் மட்டும்!!

இப்போது சொல்லுங்கள்? என் வாழ்க்கையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கிறதா? இல்லையா? ஆண்களால் தான் இப்படி அடிக்கடி முகத்தை மாற்றி கொள்ள முடியும், [அதாவது, விதவிதமாய் அசிங்கப்படுத்திக் கொள்ள முடியும்!] இந்த தாடி தான் வளர மாட்டென் என்கிறது! இந்த வார குமுதத்தில் மதன், நான் ரசிகன் கட்டுரையில், தாடியைப் பற்றி எழுதியிருந்தார். பெரியாரும், தாகூரும் தாடி இல்லாமல் வந்தால் நம்மால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மாதிரிக் கட்டுப்பாடுகள் எல்லாம் பெரிய தலைவர்களுக்குத் தான்..எனக்கு என்ன? அடுத்ததாக மொட்டை போட்டுக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்? என்ன சொல்கிறீர்கள்?

9 Responses
  1. Anonymous Says:

    மலரும் நினைவுகள். இதில் பெரும்பாலான அனுபவங்கள் (வாத்தியார்கள் முறைப்பு உபரி) கல்லூரி மூன்றாம் வருடத்தில் நிகழ்ந்ததுண்டு! யார் பேச்சையும் கேட்காதீர்கள், சடை வளர்ப்பது always cool.


  2. how r u doing this in Chennai...I tried this last year...and just had to be a live bait for various kinds of lice and what not...my dad told me that he would have to take me to a veterinary doctor to clean my koondal...

    Nice blog..actually came to this one..after typing for sourashtra...me melli palkaroosi.

    thurey mathiri tamilum likkana..ourey vatho englighum likkatho kalayi...

    very nice post about the history of sourashtra also...


  3. sanyaasi

    ungaludaya perai pathale, ungalukku mudi valarpathil piriyam athigam endru purigirathu! :)

    maduraiaria

    risk onnu eduthutta appuram yaar sonnalum pin vaanga koodathu?

    mogo deethemaam likkatho kalaai!

    thank u, i have another interesting article about sourashtra community..i will post it later

    kalai

    thangaludaya pugaipadam ennayum pugaipadam pidikkirathe? nalla irukku..

    and thanks for bookmarking my blog! konjam irunga..en thalai mudiyai siluthu vittukkuren! hehehe..


  4. Anonymous Says:

    Hi Pradeep,

    All of ur blogs are very interesting and too good...

    Some similarity between u and me in "work locations"...means first i was in delhi, now in bangalore..next (?) chennai...

    Thru KRS balaji i came to know ur blog..keep going....

    Thiruppathi.KR


  5. Thiruppathi.KR

    Thanks for ur valuable comments.

    next(?) chennai? keep ur fingers crossed!

    Ya! KRS is a regular reader of my blog :)

    Kayal,

    That's the way to go buddy! all the best.


  6. Anonymous Says:

    Pradeep,
    ippo ella neraya per inda maadiri mudi valakka aarambichitaanga... What u can do different in this is... U can keep Kanagambaram (or Thirumbipar) poo in 'U' shape which will really different.

    pasanga oru kaadule 'thodu' podra maadiri...iduvum periya fashion aagum... enna solre?


  7. Anonymous Says:

    un ideavai naan konjam karpanai panni paathathula, 1 hr vidaama vaanthi eduthurukken!

    (thirumbipaaramla..thirumbipaar!)

    -pradeep


  8. Anonymous Says:

    pradeep,
    KRS sonnadayum konjam senju paaru... SUPERRRRRR... :-)) adai padikkum podu ennala sirikkama irukka mudiyala... aana unnai paathu REMO vikram, appidi ippidinnu sonnada potrukka..adai taan konjam namba mudiyala.konjam unmaiyaavum ezhuda paaru. but still lot of diff styles are here... talaiyayae oru modern art maadiri senjuko.

    regards,
    Lakshmi.


  9. Anonymous Says:

    Nee sonnathele, antha hotel kathai thaan nalla erunthathu...

    enda pradeep karthick enna unakku pedikamattenkethu.