நாடகம் : வேகம்
கதை
வசனம் : நாணு
அரங்கம் : வாணி மஹால், மஹாசுவாமிகள் அரங்கம்

ஒரு நடுத்தரக் குடும்பம். குடும்பத்தலைவன், தலைவி, பிள்ளை, தலைவனின் அப்பா. அப்பாவின் பழைய தார்மீகக் கருத்துக்களுடனும், பிடிவாதத்துடனும், பிள்ளையின் புதிய சிந்தனைகளுடனும், பிடிவாதத்துடனும் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் கதை. வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது, பெற்றோர் ஒரு வேகத்திலும், பிள்ளைகள் ஒரு வேகத்திலும் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்காக வாழ்வதே நம் வாழ்க்கை என்று தம்பதிகள் உணர்வதாய் நாடகம் முடிகிறது. இவ்வளவு நுணுக்கமான பிரச்சனையை இவ்வளவு எளிமையாக அழகாக கையாள முடியுமா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தேவை இல்லாமல் இளைய சமுதாயத்தினருடன் உங்களுடைய பழமையான கருத்தை திணிக்காதீர்கள் என்று வீட்டின் முதியவருக்கும், அதிகமாக பெரியவர்களை உங்கள் இழுப்புக்கு இழுக்காதீர்கள், அவர்கள் உடைந்து விடுவார்கள் என்று இளைய சமுதாயத்தினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அது நேரடியான அறிவுரையாய் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போலிருந்தது பாரட்டுக்குரியது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனையை மிக அழகாக கையாண்டிருக்கிறார் நாணு. தேர்ந்த பாத்திரப் படைப்பு. மிக அற்புதமான நடிப்பு. நாடகத்தின் தாக்கம் என்ன என்பதை நேற்று தான் உணர்ந்தேன்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நாடகக் கலைஞர் ராமானுஜம், பழைய நடிகை லீலா, அவர் மகள், நடிகர் ராதாரவி அனைவரும் வந்திருந்தார்கள். அவருடைய பரம்பரைக் குரலில் மிக அழகாகப் பேசினார். கடைசியில் கொஞ்சம் அம்மா புகழ் பாடினார்!

நாடகம் தான் அவருக்கு தாய்வீடு என்றும் சினிமா வெறியர்களை உருவாக்கும்; நாடகம் தான் ரசிகர்களை உருவாக்கும்! என்றும் இது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இடம் என்றும் சிலாகித்துப் பேசினார். நாடகத்தில் கர்ணன் வேஷம் போடுவான், அந்தக் காட்சி முடிந்ததும் மேடைக்குப் பின்னால் சென்று யாரிடமாவது டீ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பான் என்று நாடகக்காரனின் பரிதாப நிலையை நகைச்சுவையாகச் சொன்னார். நாடகம் தான் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய சிறந்த ஊடகம் என்றார்.

இத்தைகைய ஒரு நாடக விழாவைக் கொண்டாடும் டிவி. வரதராஜனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு வரதராஜன், இந்த இடத்தில் நாடகம் தான் கதாநாயகன், ஆதலால் பாராட்டு விழா நடத்துவதென்றால் ஒரு நாடகம் போடுங்கள் என்றார். 15ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. விழா நிறைவு பெறுகிறது என்று சொல்வதை விட, மனம் நிறைவு பெறுகிறது என்று சொல்வது தான் சரி என்று முடித்தார். எத்தனை அழகான பேச்சு!

மன நிறைவோடு நானும் வீடு வந்து சேர்ந்தேன்!

ஒரு விஷயம். இந்த விழாவில் எந்த வலைப்பதிவாளரையும் நான் பார்க்கவில்லை. வருவதில்லையா? அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா? "மீசையானாலும் மனைவி"க்குத் தான் எல்லோரும் வருதாய் உத்தேசமா?

1 Response
  1. Anonymous Says:

    Pradeep, inda naadagam unakku...Doordarshanil Sevvaikilamai podum 1hr naadagam ponru thonravillaya?
    enakku ennamo inda VEGAM-NAANU kadai ponru en vaazhvil oru 500 kadayi paditho, paartho iruppen enru thonrugiradu...
    unmayileye..Naadagam parpadu konjam bore thaan...aanal angu varugira ovoru varayum paarpadu thaan interestinga irukkum enru ninaikkiren