Image hosted by Photobucket.com

மறுபடியும் அவள் தான். அவனுக்கு பெருமை தாங்க முடியவில்லை. இருக்காதா பின்னே, இன்றைய இளஞர்களின் கனவு தேவதை ஒரு நாளைக்கு இத்தனை தடவை இவனுக்கு ஃபோன் செய்தால், யாரா இருந்தாலும் இப்படி ஒரு மிதப்பிலே இருக்கத் தானே செய்வாங்க!

சொல்லு! [கவனிக்க: ஒருமையில வந்து ரொம்ப நாளாச்சு!] என்றான்.
ஒன்னுமில்லை, ஷாட் முடிஞ்சது. சும்மா தான் பண்ணேன். நீ என்ன பண்றே? என்றாள்.
சத்தியமா உன்னை நினைக்கலை, என் வேலைய பாத்துட்டு இருக்கேன்!!
இது தான்டா, எனக்கு உன்கிட்ட புடிச்சதே, எத்தனை பேரு எனக்கு ஃபோன் பண்ணி ஜொள்ளு விட்றான் தெரியுமா?
உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது? இப்படி இருக்குறவன் எனக்கு ஏன் ஃபோன் பண்ணே?
காதல் படம் பார்த்தேன், நல்லா நடிச்சிருந்தே, உன்னை பாராட்டனும்னு தோனுச்சு!
எப்படியோ உன் நம்பர் கிடைச்சது. சரி பண்ணிப் பாப்போமேன்னு பண்ணினேன். இதை நான் உன்கிட்டா 10789 தடவை சொல்றேன்.
நான் உன்னை ரொம்ப படுத்துறேனோ?
சே, சே! காதல் சந்தியா கிட்ட பேச கசக்குதா என்ன?
உன்கிட்ட பேசுறேன்னா அம்மா கூட ஒன்னும் சொல்ல மாட்றாங்க. அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தேல்லே, அம்மாக்கும் உன்னை ரொம்ப புடிச்சு போச்சு! அது எப்பிட்றா, பொண்ணு..அம்மான்னு சகட்டு மேனிக்கு எல்லாத்தையும் மயக்கிட்றே?
எனக்கு என்னமோ நான் பிரபலாமானவன் மாதிரியும் நீ என்னோட ரசிகை மாதிரியும் தோனுது!
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உன் ரசிகை தான்!
டேய் ஆபிஸுக்கு லேட் ஆகலை?
யாரு க்ராஸ்டாக்? என்றான்.
எனக்கு ஒன்னும் கேக்கலையே என்றாள்.
எந்திரிப்பா, ஆபிஸுக்கு போகனும்ல?
அட இது அம்மாவாச்சே, இங்கே எங்கே வந்தா?

தம்பி டேய்! எந்திரி மணி பாத்தியா? என்று கடிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. அவன் கையில் செல்ஃபோன் இல்லை. 8:30 மணி வெயில் சுல்லென்று முகத்தில் அடித்து உண்மை சுடும் என்றது!!

சந்தியாவின் நம்பரை ஒரு முறை மனதுக்குள் சொல்லிக் கொண்டான்! இன்னைக்கு எப்படியாவது ஃபோன் பண்ணிடனும்!

இரவு மணி 8:37 நிமிஷம், 36 நொடி! நம்பரை அடித்தான். வயிற்றை ஏதோ செய்தது..

கேன் ஐ டாக் டு சந்தியா? சந்தியா இருக்காங்களா?
சந்தியா தான் பேசுறேன்.
[வயிறு ஜிவ்வென்றது!]
எல்லாரும் சொல்றது தான். மேடம் நான் உங்க ரசிகன். என் பேர் கூட முருகன் தான். நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க!
தேங்க்ஸ் ங்க! [சலிப்புடன்!]
நான் ஆர்ஸ்ல மார்க்கெட்டிங் எக்ஸியுக்யுட்டா இருக்கேன்!
ஓ!
என்ன உங்க அடுத்த படம் வரலையா?
மலையாளத்துல ஒரு படம் முடிச்சுட்டு இன்னைக்குத் தான் வந்தேன்.
உங்க அடுத்த படம் யார் கூட?
ரோஜா கம்பைன்ஸ்க்காக ஒரு படம் பண்றேன்!
யார் டைரக்டர்?
சசி!
உங்க வீடு எங்கே மேடம்?
வடபழனி
ஒகே மேடம்! பாய்!
ஓகே!
டொக்..

முதல் முறையே அவளைக் கவர நாள் முழுவதும் பேசிப் பார்த்து வைத்திருந்தது மறந்ததை நினைத்து அவனைத் திட்டிக் கொண்டான்!

இன்னைக்கு 39வது ஜொள்ளு என்று ஃபோனை ஆஃப் செய்தாள் காதல் சந்தியா!

1 Response
  1. Anonymous Says:

    Beautiful Immagination..

    - Durga