இந்த இடம் எனக்கு புதுசு தான்..ஒரே கூட்டமா, கசகசவென இருந்தது..நிறைய லைட் போட்ருந்தாங்க! அதான் கொஞ்சம் மனசுக்கு நல்லா இருந்தது. வழக்கம் போல சுத்தி முத்தி பார்க்க ஆரம்பிச்சேன். பொறந்ததுல இருந்தே எனக்கு இந்த பழக்கம். எங்க வந்தாலும், எது எது எப்படி எப்படி இருக்குன்னு கூர்ந்து பாக்குறது என் வழக்கம்.! அப்படி தான் பாத்துட்டு இருந்தேன். ஒரு 2 வரிசை தள்ளி ஒரு பொண்ணு. அவளும் என்னை மாதிரி தான்னு நினைக்கிறேன், முட்டை கண்ணை வச்சுட்டு, அதை உருட்டி உருட்டி அங்கே இங்கே பாத்துட்டு இருந்தா..ரெண்டு பேர் பார்வையும் ஒரு இடத்துல மோதிடிச்சி..மோதித் தானே ஆகனும்! அவ எப்படி இருக்கான்னு சொல்லைலயே..வயசுக்கேத்த உடம்புன்னு சொல்லலாம். முட்டைக் கண்ணு. ஜீன்ஸ் ல டாப்ஸ¤ம் ஸ்கர்ட்டும் போட்ருந்தா..உங்களுக்குத் தான் தெரியுமே, இந்த காலத்து பொண்ணுங்க எப்படி சட்டை போட்றாங்கன்னு..அதே தான்..அவ கைய தூக்கும் போதெல்லாம் தொப்புள் தெரிஞ்சது..இந்த மாதிரி எல்லாம் பாத்தா எனக்கு அப்படி ஒன்னும் ஆறதில்லை..பசங்க ஏன் தான் இதுக்கெல்லாம் அலையிறாங்களோன்னு தோனும்!

என்ன சொல்லிட்டு இருந்தேன், ரெண்டு பேர் பார்வையும் மோதிச்சா, நான் அவளைப் பாக்காத மாதிரி திரும்பிட்டேன். இப்படி எத்தனை நேரம் அவ என்கிட்ட இருந்தும் நான் அவகிட்டயும் தப்பிக்க முடியும் சொல்லுங்க. இந்த தடவை நானும் அவளும் நேருக்கு நேர் பாத்துகுட்டோம். அட என்ன..இது என்னைப் பாத்து சின்னதா சிரிக்கிறாளே..

ஒருவேளை எனக்கு தெரிஞ்ச பொண்ணா, நானே இந்த ஊருக்குப் புதுசு, இவளுக்கு என்னை எப்படி தெரியும்? ஒருவேளை லூசோ? சே, சே..ஆளைப் பாத்தா அப்படி தெரியலையே..லூசா இருந்தா இந்த மாதிரி இடத்துல எல்லாம் எப்படி வர முடியும்?

பதிலுக்கு சிரிக்கிறதா வேணாமா, பொம்பளை சிரிச்சா போச்சு பொகையிலெ விரிச்சா போச்சுன்னு சொல்வாங்களே, இப்போ சிரிப்பா, அப்புறம் பக்கத்துல வந்து உக்காருவா, எனக்கு ரொம்ப போர் அடிக்குது, கொஞ்சம் கம்பெனி கொடுங்கன்னு கேப்பா, அப்புறம் ·போன் நம்பர் கேப்பா, அப்படியே பைக் ல எங்களை எல்லாம் கூட்டிட்டு போக மாட்டீங்களாம்பா, ரிங் ரோட்டுக்கு போவோம் அங்கே தான் யாரும் இருக்க மாட்டாங்கன்னு ஆசை காட்டுவா, அவளோட ஆளுங்க அங்கே ஏற்கனவே வந்திருப்பாங்க, கழுத்துல கை வச்சி என்னோட செயின், ப்ரேஸ்லெட், பணம், செல் ·போன் எப்படி எல்லாத்தையும் புடுங்கிட்டு, மூடு சரியில்லேன்னா கொன்னுட்டும் போயிடுவாங்க, சரி அப்படியே அவ அந்த மாதிரி பொண்ணா இல்லைன்னாலும், நல்லா கொஞ்ச நாள் பேசிட்டு, பைக்ல சுத்திட்டு, நீ இல்லாம என் வாழ்க்கை நிறைவடஞ்சுருக்காதுடா புஜ்ஜி [செல்லமா கூப்பிட்றாளாம்!]ன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசிட்டு, அமேரிக்கா மாப்பிள்ளை வந்தவுடனே, ஒரு பொண்ணு உங்ககிட்ட சிரிச்சு பேசிறக்கூடாதே, உடனே உங்களையே நெனச்சு உருகுறான்னு நெனச்சுக்குறது, "பாய்ஸ் ஆர் சிக்"னு சொல்லிட்டு போயிட்டே இருப்பா...இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் இதானே வேலை..நாட்ல எத்தனை நடக்குது, எதுனா நடந்தா அவ அழுதா போதுமே ஊரே கூடிடும், நான் சொல்றதையா கேப்பாங்க..

எனக்கு எதுக்குங்க இந்த வம்பெல்லாம்...னு

அனாவசியமா கண்டதெ நெனைக்காம நானும் அவளைப் பாத்து சிரிச்சேன். அடா, அடா..அவளோட அந்த முட்டை கண்ணுல தான் என்ன ஒரு உற்சாகம், துள்ளல்..அட போங்க நீங்க வேற, நாங்க என்ன உங்களை மாதிரியா, எங்க ரெண்டு பேர் வயசைக் கூட்டினாலே ஒரு 5 அல்லது 6 தான் இருக்கும்..இதுல அவளைப் பாத்து சிரிக்கிறதுக்கு எனக்கு என்ன பயம் சொல்லுங்க?

3 Responses
  1. Anonymous Says:

    ganesappu!

    athaan last sollittene, intha mathiri ellam nenaikkalainnu..poravenna?

    moorthi

    aaha..aarambichuttaiyngayya...

    Thanks for ur comments!

    -pradeep


  2. Anonymous Says:

    In the first para itself you had showed that this is the story about kids. So there is no suspense at all. ozhunga ezhudhave maateengalaaaaaaaa...


  3. Anonymous Says:

    hai pradeep,

    a good work.
    manidha manangal kurithum manidha vaazhvu kurithum eludhungal.
    nichayam ungalai nalla ezhuthaalanaaga maatrum.
    vaazhthukkal.