நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவது என் தலையாய பணியாய்க் கருதி..இதோ சிம்ரனுக்காக ஒரு Clerihew!

சின்ன இடையும்
சிக்கென்ற உடையும்
கடந்தகாலம்
சிம்ரனுக்கு..

எனக்குத் தெரியாதா? நான் சிம்ரனுக்கு எழுதினால் ஜோதிகாவுக்கு எழுது என்று அடுத்த comment போடுவீர்கள்..முந்தித் தருவது எந்தன் சிறப்பு!!

ஆதி முதல்
அந்தம் வரை
பாதி பயல் ஜொள்ளுவது
ஜோதிகா

யாருப்பா அது சினேகாவுக்கு எழுதச் சொல்றது? இனிமே நான் Clerihew பக்கம் தலை வச்சி படுத்தா என்னன்னு கேளுங்க!!



ஐய்யாயாயாயாயா!!

ஐம்பதாவது பதிவு!
[profile ல 45 காட்டினா நான் பொறுப்பில்லை..வேணும்னா எண்ணிப் பாத்துக்குங்கோ!! ஆமா!]

க்ளரிஹ¤ [Clerihew]

சென்ற வாரத்துக்கு முந்தின வார விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் க்ளரிஹ¤ [Clerihew!] என்ற ஒன்றை சுஜாதா அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஒரு க்ளரிஹ¤ என்பது எப்படி இருக்கு வேண்டுமென்றால்:

1. 4 வரி கவிதை
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்து
3. Rhyming ஆக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்!

அவ்வளவு தான்..எங்கே எழுதுங்கன்னுட்டார்! அவருக்கென்ன...

அவர் வாக்கு தான் நமக்கு வேத வாக்காச்சே..ஏற்கனவே 1 வரிக் கதைகள், Sudden Fiction கதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று பல அரிதாரங்களை பூசிக் கொண்டு சுற்றிய எனக்கு இது என்ன பெரிய விஷயமா...[ஆடாதடா..ஆடாதடா..மனிதா! ரொம்ப ஆடினென்னா அடங்கிடுவே மனிதா..!! ஆமா ஏன் இந்த பாட்டு இப்போ நினைவுக்கு வருதுன்னு புரியலையே!]

சரி ஒரு பிரபலமானவரை கேலி செய்ய வேண்டும், அவ்வளவு தானே..உடனே பத்மாசுரன் ஆகிவிட்டேன்..வரம் கொடுத்தவர் தலையிலேயே கையை வைத்தேன்!

விடிவு காலம் பிறக்காத
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

முடிஞ்சது க்ளரிஹ¤! சரி இதை நம்ம எங்கே விகடனுக்கெல்லாம் அனுப்புறது என்று நினைத்து தேசிகனாரை கனக்டினேன்.. [phone sir!] அவர்கிட்ட இதைப் பத்தி சொல்லி,
சார், நீங்க எப்படியும் சென்னை போய் சாரைப் பாப்பீங்கள்ல..இது சரியான க்ளரிஹ¤ ஆ என்று கேட்டு வாருங்கள் என்றேன்! அவரும் Big மனது பண்ணி சாரிடம் கேட்டு வந்தார். [சுஜாதாகிட்ட என் writing போயிருச்சாக்கும்! நான் லேசுபட்டவன் இல்லங்கானும்!!] சுஜாதா சார், "பரவாயில்லையே இந்த பிரதீப் பையன் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைய வச்சுட்டானேன்னு" சொல்லி, "என் நண்பர் தேசிகனின் நண்பர் பிரதீப் எழுதிய க்ளரிஹ¤ இது" என்று அடுத்த கற்றதும் பெற்றதுமில் வரும் என்று காலை, பகல், சாயந்திரம், இரவு என்று பல கனவு கண்டு கொண்டிருந்தேன்!

தேசிகன் சென்னையிலிருந்து திரும்பியதும், என்ன சார், என்னோட விஷயத்தை சார்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டேன்! அதுக்கு அவர், "சொன்னேன்..இது தப்புன்னு
சொல்லிட்டாரு..rhymingஆ இல்லையே..4 வரியும் rhyming [rhyming தமிழ் வார்த்தை என்னப்பா!??!] இருக்கனுமாம்" என்று சொல்லி இருக்கிறார். நான் துளி கவலை படனுமே..Never! எப்படியோ நம்ம எழுத்து சார் வரைக்கும் போயிருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்! [எனக்கென்னமோ, இந்த celebrities எல்லாம் வானத்துல இருந்து குதிச்சவாளோன்னு ஒரு சந்தேகம்!]

ரொம்ப ரொம்ப நன்றி தேசிகன்!!

சரி இப்போ அதை எப்படி சரி செய்வது?

கேட்டையே விளைவிக்கும்
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

[கேட்டு, ஓட்டு..எப்படி?..என்ன இது Software ல Programming Version மாதிரி upgrade பண்ணிட்டே இருக்கியேன்றேளா?]

சரி என்ன இப்போ rhyming ஆ இருக்கனும் அவ்வளவு தானே..current hot topic எது? அதை எடு..இதோ க்ளரிஹ¤!!

தொடாத இடம் தொட்டு
படாத பாடு படுகிறார்
மடாதிபதி
ஜெயந்திரர்!!

[அதுவா வருதுப்பா!]

அடுத்து ஒரு பெரிய பிரபலத்தைப் பற்றி..

நல்ல பெயர் எடுப்பான்
எல்லா புகழும் அடைவான்
இன்று யாருக்குமே தெரியாத
பிரதீப்

இதில் க்ளரிஹ¤ வின் இலக்கணம் பொருந்தியிருக்கிறதா என்று பார்ப்போம்.

1. 4 வரியில் இருக்கிறது
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்வது - இங்கு நான் என்னை பிரபலமானவனாய் காட்டியிருப்பதே கேலி செய்வதாகிறது!
3. ஓரளவுக்கு Rhymingஆகவும் இருக்கிறது..

என்ன இப்போ ஒத்துண்ட்டேளா?


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்றே ஆணுரை விளம்பரத்தை வெளியிடலாம் என்று நினைத்தேன்..

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை" பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது..ஆம்! நேற்று என் ப்ளாகில் மட்டும் ஏதோ Errorஆம். நாங்கள் எங்கள் Engineer களை கேட்டு விட்டு சொல்கிறோம் என்று Blogger.com காரர்கள் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய் வெளியே அனுப்பி விட்டார்கள்!! அதனால் அதை இன்று பதிகிறேன்..இன்று என்னை உள்ளே விட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்!! நீங்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்தால் என்னை உள்ளே விட்டு விட்டார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

So, Start Camera! Action!!

இந்த விளம்பரத்திலும் வசனம் இல்லை..பின்னனி இசை மட்டும் தான்..

ஒரு வயதானவர் கவலையாய் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகன் அவரை கன்னாபின்னா என்று திட்டுகிறான்..[என்ன புரிஞ்சிருச்சா..முதல்ல கேளுங்கப்பா!!]அவர் கவலையாய் வீட்டை விட்டு வெளியே வருகிறார். தெருவில் மெல்ல நடந்து செல்கிறார்.

அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up] வெறுத்து சிறிது தூரம் செல்கிறார்..தெருவின் அந்தப் பக்கத்துச் சுவரில் அந்த ஆணுரை விளம்பரம். அதையே ஏக்கமாய் பார்க்கிறார்!! அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up]

இதை அன்னைக்கே உபயோகிச்சிருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலமை வந்துருக்குமா என்பது போல் பார்க்கிறார்!

அந்த சுவரின் விளம்பரத்தின் close-up!

இது கொஞ்சம் Naughty Advertisement வகையைச் சார்ந்தது..இந்த ஆணுரை உபயோகிச்சிருந்தா அந்த பையன் இருந்திருக்கவே மாட்டான்..ஆனா அவருக்கு வாரிசே இல்லாம போயிருக்குமே என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது..

இந்த விளம்பரத்துக்கு சொக்கலிங்க பாகவதர் தான் சரியானவர் என்று எனக்குப் படுகிறது..என்ன ப்ரயோஜனம்? இப்போ அவர் இல்லையே? பூர்ணம் விஸ்வநாதனைப் போட்டா? No No..இந்த மாதிரி விளம்பரத்துகெல்லாம் நம்ம காதல் மன்னன் தான் சரியா வருவாரு!! Yes!! My Choice is ஜெமினி கணேசன்!! எப்படி?

இப்போதைக்கு இது தான்..ஜுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!