சமீபத்தில் அழகிய தீயே என்று ஒரு கவிதை பார்த்தேன்! ஆமாம், அது படம் அல்ல, கவிதை தான்..இயல்பான கவிதை.

காதல் எப்படி நமக்குத் தெரியாமல் உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே போல் தான் இந்தப் படமும் என்னுள் எனக்கே தெரியாமல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!

நான் இங்கு படத்தைப் பற்றி பேசப் போவதில்லை..அதனால் எனக்கு விளைந்த விளைவுகளால் நீங்கள் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

Disclaimers: இதே போன்று உங்களுக்கும் ஆகுமென்று கட்டாயமில்லை..நான் கொஞ்சம் over தான்..

படம் பார்த்த மறுநாள் வண்டியில் office சென்று கொண்டிருந்தேன்..என் தம்பியை bus stop ல் விட்டுச் செல்வது வழக்கம். படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே stop ஐ கடந்து போய்க் கொண்டிருந்தேன்..அவன் பின்னால் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தான்!! சுய நினைவு திரும்பி அவனை இறக்கி விட்டதும், என்னை கை நீட்டி ஏதோ சொன்னான்..நல்லவேளை helmet மாட்டி இருந்ததால் சரியாய் காதில் விழவில்லை!

இன்னொருமுறை வேறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சாவி ஏன் உள்ளே போக மாட்டேங்குது என்று முழிக்கும் போது, டேய் நம்ம வண்டி அங்கே இருக்கு, யாராவது பாத்துரப் போறான் எறங்குடா என்றான்.................வேறு யார் சாட்சாத் என் தம்பி தான்..

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

அந்தப் படம் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திற்கு இந்த இரண்டு உதாரணம் போதுமென்று நினைக்கிறேன்! இனி நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!


0 Responses