சுஜாதா குமுதத்தில் சின்ன சின்ன சிந்தனைகளில் குட்டிக் கதைகள், ஹைக்கூ, 1 வரிக் கதைகள், 55 வரிக் கதைகள், sudden fiction கதைகள் பற்றி விளக்கி நம்மையும் முயற்சி செய்யச் சொன்னார்...1 வரிக் கதைகளைப் பொறுத்தவரை கொஞ்சம் நான் முயற்சி செய்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் sudden fiction கதைகளிலும் என் கால்களை பதித்திருக்கிறேன்..அதன் விளைவு கீழே!

நான் கண் விழிக்கவும், கடிகாரத்தின் குருவி 8 முறை கூவவும் சரியாக இருந்தது. கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தேன். அவரை விலக்கி என் முந்தானையை எடுத்துக் கொண்டேன், மெல்ல முனங்கினார்..நேத்தும் தூங்க 2 மணி ஆயிடுச்சு, daily இதே கதை தான்..sir க்கு மூடு வந்துட்டா அவ்வளவு தான்...இந்த மனுஷனுக்குத் தான் என் மேல எம்புட்டு பிரியம், எல்லா ஆம்பளங்களும் இப்படியா இருக்காங்க? இவர் தான் office விட்டா வீடு, வீடு விட்டா office னு இருக்காரு..இந்த areaல அந்த மாதிரி பொண்ணுங்களுக்கா குறைச்சல், தலை எடுத்து பாக்க மாட்டாரே..அட இன்னைக்கு சனிக்கிழமையா? அப்போ இன்னைக்கும் இதே கூத்து தான். அப்படி என்னத்தக் கண்டாரோ அவருக்குத் தான் வெளிச்சம்.

ஒரு வழியாய் அவரை எழுப்பி office அனுப்பி வைத்தேன்.."5 மணி, 5 மணி..ரெடியா இரு, ரெடியா இரு..சினிமா போறோம்!" எனக்கு சிரிப்பு தான் வருது. அன்னைக்கு வேலை நல்லா ஓடுச்சி! அவரோட நெனப்பாவே வேலை செஞ்சதாலே அலுப்பே இல்லை..ஒரு வழியாய் 4, 4:30 போல நல்லா ஒரு குளியல் போட்டுகிட்டு [அவருக்கு அவர் வரும்போது குளிச்சி freshஆ இருக்கணும்..ஹிஹி] ஜம்முன்னு ரெடியாகி wait பண்ணிட்டு இருந்தேன்..மணி 5:00 ஆச்சு, காணோம், 6 ஆச்சு காணோம், சரி office ல வேலையா இருப்பாரோன்னு TV ஐ போட்டு உட்கார்ந்தேன்..9 மணி வரை வரவே இல்லை..office போன் போட்டா அவருக்கு பிடிக்காது..சரி வர்றப்ப வரட்டும்னு பேசாம இருந்தேன்..

10 மணி வாக்கில் சொக்கு வந்தான், எக்கோவ், உன் sir க்கு கொஞ்சம் change வேணுமாம், புதுப் பொண்ணு டீனா கிட்ட போயிட்டாரு, பெரியக்கா இந்த பார்ட்டியை அனுப்சுருக்கு..என்று இயந்திரத்தனமாய் சொல்லி விட்டு நகர்ந்தான்..புதுசாய் வந்தவன், சட்டை பொத்தான்களை கழற்றியபடி உள்ளே நுழைந்தான்..

sudden fiction கதையின் இலக்கணமே மொத்த கதையும் கடைசி ஒரு வரியில் தான் இருக்கும்..ஒரு எதிர்பாராத திருப்பம்..அட இதையா சொல்ல வர்றான், எதிர்பார்க்கவே இல்லையேன்னு தோனனும்..

என் கதையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே இது தான் என்று புரிந்திருந்தால், என் கதை புட்டுகிச்சின்னு அர்த்தம்..

1 Response
  1. Anonymous Says:

    It is realy a sudden fiction. I stuned at the last line of the story. Well.. good try.. keep it up. Suspense has been preserved till the last line.