விஜயநகரத்துக்காரர் தன்னுடைய blogல் நான் எழுதிய பொதுவுடைமையை எதிர்த்து ஒரு நல்ல debate ஐ
தொடங்கி இருக்கிறார்! கலகம் பொறந்தாத் தான் நியாயம் பொறக்கும் என்கிற கதையாய்..

எல்லோரும் சந்தோஷமாய் இருக்கலாம் என்ற கொள்கையை பலர் எப்படி எதிர்க்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை! சரி அவருடைய கேள்விக்கு என்னால்
ஆன பதிலை சொல்கிறேன்! அதோடு என்னுடைய இரண்டாவது பகுதியையும் சேர்த்துக் கொள்கிறேன்!

1. நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன். எல்லாத்துக்கும் மனித உழைப்பு தேவை தான். எல்லோரும் ஒரே சமூகமா இருந்து உழைச்சா எல்லாத்துக்கு எல்லாம்
கிடைக்கும்ன்றது தான் என்னோட வாதம்! இப்போ நிறைய நிலம் சொந்தமா வச்சுருக்குறவங்க நிலத்துல பல பேர் கூலிக்கு வேலை செய்றாங்க! ஒன்னுமே
செய்யாம நிலம் வச்சுருக்குறவன் சந்தோஷமா இருக்கான்! நாள் பூரா கடுமையா வேலை பாக்குறவனுக்கு அதிகமா போனா கூலியா ஒரு 10 ரூபா கொடுப்பானா?
இந்த மனுஷன் அந்த நிலத்துக்கு சொந்தக்காரரை விட எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டான்? அவனும் 10 மாசம் தான்..இவனும் 10 மாசம் தான்..

2. ஆரம்பத்துல மனுஷனுக்கு என்னோட குடும்பம்னு ஒன்னும் இல்லை! எல்லோரும் ஒரு கூட்டமா சேர்ந்து வாழ்ந்தாங்க.."வால்கா முதல் கங்கை வரை" படிங்க!
அப்போ எல்லாரும் இஷ்டத்துக்கு sex வச்சுக்கிட்டாங்க! ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற conceptயே இல்லை..அதனால இவன் என் மகன் இவனுக்கு நம்ம சொத்து
சேக்கனும்ன்ற எண்ணமே இல்லை..கிடைச்சதை வச்சு வாழ்ந்தாங்க! ஆனா நீங்க சொல்றபடி ஒரு கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்கும் சண்டை இருக்கத்
தான் செய்தது..யார் வலியவர்கள், யார் யாரை அழிப்பது என்று பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் அன்று இருந்த மனித வர்கம் அல்ல
நாம்..நாகரிகம், கலாச்சாரம் என்ற ரீதியில் நாம் நிறைய முன்னேறி விட்டோம்? அப்படித் தானே?

3. இதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ராகுல்ஜி சொல்லும்போது, அன்று ஒரு தச்சனுக்கு தன்னுடைய பொருள்கள் சொந்தமாய் இருந்தன..ஒரு
குயவனுக்கு மண்பாண்டம் செய்ய உதவும் கருவிகள் அவனுக்குச் சொந்தமாய் இருந்தன என்று சொல்லி முடித்து விட்டார்! நீங்கள் சொல்வது போல் அப்போதும்
நிலக்கிழார்கள், ஜமிந்தார்கள் இருக்கத் தான் செய்தார்கள். இதை நான் ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் இயந்திரங்களால் சுதந்திரத் தொழிலாளர்களின் கை
எப்படிக் கட்டப்பட்டது என்பதை நான் விலக்கி இருக்கிறேன்! முதலாளித்துவத்திற்கு தொழில் வளர்ச்சி ஒன்றே காரணம் என்பதை விட, அதுவும் ஒரு முக்கிய
காரணம் என்று கொள்ளலாம் என்று தான் நினைக்கிறேன்!

4. வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று நானே சொல்லி இருக்கிறேனே? மக்கள் தொகையை நீங்கள் கட்டுப்படுத்த
நினைத்தால் நீங்கள் பல மதங்களின் எதிரி ஆக வேண்டி வரும்! மக்களின் பல மூட நம்பிக்கைகளை போக்க வேண்டும்!

5. இதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது...இன்றும் அன்றாடத் தேவைகள் கூட இல்லாமல் உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம் இந்தியாவையே
எடுத்துக் கொள்ளுங்கள். ராகுல்ஜி இந்த நூல் எழுதும் போது 1946 என்று சொன்னேன்..அப்போது அவர் ஏதோ குஜராத்திலோ, பீகாரிலோ [சரியாய் ஞாபகம்
இல்லை] சில கிராமங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 மாதங்கள் [அறுவடை சமயங்களில்..]தான் அந்த மக்களுக்கு தினமும் உணவு கிடைப்பதாகச்
சொல்கிறார்! மற்ற ஆண்டுகளில் அவர்கள் பட்டினியாய்த் தான் கிடந்தார்களாம்..இதை இறந்த காலத்தில் நடந்ததாய் எழுத வேண்டியதில்லை என்று நான்
நினைக்கிறேன்! சுதந்திரம் வாங்கி 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இப்படித் தான் இருக்கிறது..

6. அதே தான் நானும் சொல்றேன்! மண்ணாசை, உலக சந்தையில் தன்னுடைய நாடு தான் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி
போட்டுக் கொள்கின்றன..ஒரு சமயத்தில் அது உலகப் போராய் முடிகிறது!!

7. நல்லதங்காள் காலத்தில் பொதுவுடைமை இல்லை, அதனால் தான் விபச்சாரம் இருந்திருக்கிறது..கொஞ்சம் யோசியுங்கள், எந்தப் பெண் தன் காம
இச்சைக்காகவா விபச்சாரி ஆகிறாள்? அவளுக்குத் தேவை பணம்..எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் இருக்க இடம் என்று வரும்போது எப்படிப்பா
விபச்சாரம் இருக்கும்?

8. மறுபடியும் மறுபடியும் நீங்க நம்ம நாட்டைப் பத்தியே பேசுறீங்க..பொதுவுடைமையைப் பொறுத்த வரை, உலகமே ஒரு கூட்டுக் குடும்பம்..எல்லொரும்
உழைப்பது, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பெறுவது, சந்தோஷமாய் வாழ்வது! எல்லோருக்கும் எல்லாம் சொந்தம்னு சொல்லும்போது எப்படி sir ஊழல்
இருக்கும்?

9. if women becomes financially independent, அப்புறம் எப்படி பெண்ணடிமை இருக்கும்? அவளுக்கும் ஒரு ஆணுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே
அளவு மரியாதை தான் தருவோம் என்று கொள்ளும்போது பெண்ணடிமை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து விடாதா? ஆணுக்குப் பெண் சலைத்தவளல்ல
என்று வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் வந்து விடாதா?

முடிவாக, இந்தியாவில் எங்கோ (1946)ல் ஒரு மாபெரும் பூகம்பம் வந்தது. நகரமே சுக்கு நூறானது..அதை மறுபடியும் நிர்மாணிக்க ஒரு தலைமுறை காலம்
ஆகும் என்று அரசு சொன்னது..ஏன்? அந்த நாட்டில் வேலை பார்க்க மக்கள் இல்லையா? தனிமங்கள் இல்லையா? TATA வின் ஒரு பெரிய தொழிற்சாலை
பக்கத்தில் தான் இருந்திருக்கிறது! பிறகு ஏன் இவ்வளவு காலம்? இங்கே அதற்கு முக்கிய காரணம் எல்லா சொத்துக்களும் ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாய்
இருப்பது. அவனுக்கு லாபம் இல்லையென்றால் அவன் எப்படி மற்றவர்க்கு கொடுப்பான்? அதனால் இவ்வளவு காலம் ஆகும்! இதே பொதுவுடைமை
இருந்திருந்தால், அது பொதுச்சொத்தாய் இருந்திருக்கும், அதிகம் போனால் சில மாதங்களுக்கும் இருந்ததை விட அழகான நகரமாய் மாற்றி இருக்க முடியும்!

முதலாளித்துவக் கொள்கை லாபத்தை மட்டுமே நோக்குகிறது என்பதை மேலே உள்ள உதாரணத்தின் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்! இதற்கு நம்முடைய
அன்றாட வாழ்விலும் ஒரு உதாரணம் உள்ளது!!

உதாரணத்திற்கு உங்களுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை! மாதா மாதம் உங்களுக்கு 10,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்! இப்படி
எத்தனை மாதங்கள் நீங்கள் உங்கள் தாய்க்கு மனமுவந்து செலவு செய்வீர்கள்! ஒரு கட்டத்தில் உங்களுக்கே வெறுப்பு ஏற்படும், இப்படி ஒன்றும் தேறாமல்
செலவு செய்வதற்கு அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நிச்சயமாகத் தோன்றும்! அதை நீங்கள் மற்றவரிடம் மறைத்தாலும் உங்கள்
உள்ளத்தில் தோன்றத்தான் செய்யும்! இது உங்கள் தவறல்ல, பணம், லாபம் என்ற அரக்கர்கள் உங்களை அப்படிச் செய்யத் தூண்டுகின்றன! முதலாளித்துவத்தில்
பணம் ஒன்று தான் கடவுளாய் இருக்கிறது! இதே பொதுவுடைமையில் முதியோர்களை அரசே காக்கும்..என்னுடைய பணம், நான் இவ்வளவு செலவழித்தேன் என்ற
பேச்சுக்கே இடம் இருக்காது!

பொதுவுடைமைக் கொள்கை உலகம் அத்தனையும் ஒரு கூட்டுக் குடும்பம் மாற்றி விடுகிறது. இங்கே எனது, உனது என்று இல்லாமல் நமது என்று
மாறிவிடுவதால்..எந்தப் பிரச்சனையுமே இருக்காது என்று நான் சொல்லவில்லை..முதலாளித்துவ சமுதாயத்தை விட பிரச்சனைகள் குறைச்சலாய் தான் இருக்கும்
என்று நம்புகிறேன்!!

1 Response
  1. Anonymous Says:

    Hi pradeep
    Here I am Padmapriya posting my comments as anonymour. Your writtings are excellent. AAydha ezhuthu - it is very youthful and cheerful. I remembered 12B picture while reading that. There is no herdles in your writtings. A free flow of writting is gifted to you.Try to improve your writting -1) Make it a little crisp - which will add taste to your writting 2) Your sens of humour and way of conveying it with suspense is superb - Water Lorry driver friend .. I am unable to remember the title of that story. Then your Kavithai -Ninth standard - it is very superb. I am little bit jelous about you that you are writting all types -Kavithai, Essays, Stories etc., Comparing to you I am an ameture. Mail me about to avail a blog for my self. I am having many enemies to whom I want to give a punishment by making them to read my Blog.