நான் என் நண்பர்களுடன் இருக்கிறேன். என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் 7 பேர். எல்லோரும் software field ல் தான் குப்பை கொட்டுகிறோம்.

நாங்கள் இரவு மட்டும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நான் office ல் இருந்து சீக்கிரம் போய் விட்டால் என் favourite வத்தக் குழம்பு வைத்து விடுவேன். பசங்க பாவம் துடிதுடிச்சிப் போயிடுவாங்க!! [நல்லாத் தாங்க வைப்பேன், சும்மா என்னை ஓட்றதுக்காக பசங்க இப்படி பண்ணுவாங்க!]

எங்க system படி யாராவது சமைச்சுட்டு இருந்தா, சும்மா இருக்குறவன் போய் தயிர், தொட்டுக்க சிப்ஸ் அப்படி இப்படின்னு வாங்கிட்டு வரணும். இதுல நான் எப்போவாவது மாட்டுவேன்!! நான் எப்பவுமே ஒரு வேலை சொன்னா, அதை 2 ஆக்கிடுவேன். அவ்வளவு சமத்து நான் :) இதுல எனக்கு ஞாபக மறதி வேற, கேக்கணுமா?

அதனால நான் சாமான் வாங்கப் போனா எல்லாம் சரியா எழுதிக்கொடுப்பாங்க! [அப்படியும் மறந்துருவேன்]

ஒரு நாள் நான் சாமான் வாங்க கிளம்பி போனேனா, பாதி தூரம் வந்த உடனே friend sms பண்ணான். இன்னைக்கு side dish வேணாம், potato 3/4 kg வாங்கிட்டு வான்னு சொன்னான்..சரின்னு கடைக்கு போனேன்..[அந்த aunty என்னை நல்லா sight அடிக்கும்..ஹிஹி]சரி அவங்களுக்கும் கொஞ்சம் காட்சி கொடுத்த மாதிரி இருக்குமேன்னு போனேன். [சரி சரி..] friend என்ன வாங்க சொன்னான், potato அதாவது உருளைக்கிழங்கு..நான் என்ன கேட்டேன் தெரியுமோ? அக்கா, ஒரு முக்கா கிலோ தக்காளி போடுங்கன்னேன்!!!!!!!! [எனக்கு ஆரம்பத்துல இருந்து இந்த potata, tomate குழம்பும்!] அவங்களுக்கு என்ன தெரியும் பாவம்..நம்ம ஆளு வந்துட்டான்ன மாதிரி பாத்துட்டு,

Aunty : 1 கிலோ வாங்கிக்குங்க உங்களுக்கு மட்டும் குறைச்சு போட்டுத் தர்றேன்
நான் : ஆமா இப்படி தான் எல்லாருக்கும் சொல்வீங்க எனக்குத் தெரியாதா? [அதுக்கு aunty பாத்துச்சே ஒரு பார்வை..நான் அவளை hurt பண்ணிட்டேனாம்..ஆஹா!! ஒரு கூட்டமாத் தான்யா அலையிராய்ங்க..நம்ம கிட்டேயே வர்றாங்களே!!]

so, அந்த பார்வையில் பயந்து போய், ஒரு கிலோ வாங்கிக்கிட்டேன்..எது, 3/4 கிலோ கிழங்கு வாங்கிட்டு வாடான்னா, 1 கிலோ தக்காளியோட நிக்கிறேன்..friend உள்ளே போன உடனே சொன்னான், என்னடா கிழங்கு வாங்காம தக்காளி வாங்கிட்டு வந்துருக்கேன்னு? அப்போ ஒடிச்சு எல்லா யோசனையும், இதுல அவரோட add up வேற..நினேச்சேண்டா..பையன் ஒரு தடவைல ஒரு வேலயை முடிக்க மாட்டானேன்னு" மானமே போச்சு..aunty எனக்குன்னு கம்மியா கொடுத்துருக்காடான்னேன்..அதற்கு அவர்கள் பதில்:

"இதுக்கு பிச்சை எடுக்கலாம்!!" [உபயம்: சூரியன் படம் - கவுண்டமணியைப் பார்த்து ஒமக்குச்சி சொல்லும் dialogue..

அதுக்கு நான் : இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!

சத்தியமா எனக்கு potato னா, உருளைக்கிழங்குன்னு தெரியும்..[என்னை நம்புங்க please], அவன் ரசம் வைக்கப் போறதா சொன்னான்..அப்போ 3/4 கிலோ தக்காளி எதுக்கு? அப்படியாவது யோசிச்சிருக்கணும், அதான் மண்டையிலே ஒன்னும் இல்லையே!! அவன் கிழங்க அவியல் [அவியல் தானா அது?] மாதிரி பண்ணலாம்னு கேட்ருக்கான்!! என்னை அனுப்புனா அவன் நினைச்சது நடக்குமோ?

இப்படி தான் நேத்தும் ஆச்சு!!

உப்பு - 1 pocket
parachut oil - 100 ml
milk
curd
mixture/காராபூந்தி

நேரா கடைக்கு போனேன் [actuala வளைஞ்சு வளைஞ்சு தான் போனேன்..ஹிஹி]. அந்த கடையிலே மிக்சர், காராபூந்தி எல்லாம் கிடைக்காது..[என் கஷ்ட காலம்!] so except side dishes, எல்லாம் வாங்கிட்டேன். அப்படியே வீட்டுக்கு போயிட்டேன்..நான் செஞ்ச தப்புக்கு நான் தானே போகனும், so இன்னொரு தடவை கடைக்குப் போய் side dish வாங்கினேன்..

so எல்லாமே தப்பு தப்பா செய்றதே என்னோட ஒரு தப்பான பழக்கமாயிடுச்சு..ஏன்னு தெரியலை..எனக்குன்னு ஒரு உலகத்துல நான் மட்டும் என் கனவுகளோட சுத்திட்டு இருக்கேன்..இதை நான் நகைச்சுவையா உங்களுக்கு சொல்றேனே தவிற எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..நான் எப்போ திருந்தப் போறேன்னு தெரியலை..சொல்ல மறந்துட்டேன்..நேத்து அப்படி என்ன தான் யோசிச்சுட்டு இருந்தேன்...நேத்து april fool day!!

இதை படத்துல ஒரு scenea வைக்கனும்னா என்ன செய்யலாம்னு யோசிச்சேன்..அதை நான் சொல்றேன்..உங்களுக்கு புடிச்ச herione ஐ நீங்க கற்பனை பண்ணிக்குங்க..என்ன? hero யாருன்னு சொல்லலயா? இதுல என்னங்க doubt? அகில உலக கலை நாயகன் ப்ரதீப் தான்..[என் வீட்ல எனக்கு பசங்க வைச்ச பேரு..ஹிஹி]


sunny day
Location : spencer plaza!
caste : hero, herione [hero நான்னு சொன்னதாலே அது ஒரு ஜொள்ளு பார்ட்டி character னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்..ஹிஹிஹி]
situation : இரண்டு பேரும் first time பாக்குறாங்க

Hero [herione அழகுல மயங்கி..]: Hello! என்னைத் தெரியுதா?
Herione : [பயந்து போய்] இல்லையே! யாரு நீங்க?
Hero : no problem. எனக்கும் உங்களைத் தெரியலை!
Herione [கடுப்பாகி] : excuse me..
Hero [cool] : excused!
[Herione : கடுப்பாகி போயிட்டே இருக்கா!!]
Hero [பின்னாடி ஓடிப்போய்]: 1 sec, என்னைத் தப்பா நெனைக்காதிங்க..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! இதை சொல்லனும்னு தோனிச்சி..அதான்..sorry..bye! [மெல்ல நடந்து போறான்!]
Herione : [ஒன்னும் புரியாம..மெல்ல நடந்து போறா!]
Hero : excuse me..[அவள் திரும்பிப் பார்க்கிறாள்!] நீங்க நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு april 1st..அதான் just உங்களை fool பண்ணேன்..நீங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்லை!! ;) [சொல்லிட்டு அவள் பதில் எதிர்பார்க்காதவனாய் போகிறான்]
[Herione முகம் கோபத்தால் சிவக்கிறது! வெறுப்புடன் நடந்து போகிறாள்!]
Hero : மறுபடியும்..excuse me..[அவள் மறுபடியும் திரும்பிப் பார்க்கிறாள்!] நான் இப்போ தான் சும்மா சொன்னேன்..நீங்க உண்மையிலேயே அழகா இருக்கீங்க..:)
[Herione : அவளுக்கு லேசா சிரிப்பு வருது..]
Hero : இப்போ இன்னும் ரொம்ப அழகா..:)
[Herione முகம் இந்த முறை நாணத்தால் சிவக்கிறது!! Hero பார்த்துக்கொண்டே நிற்கிறான்...]

so, என்ன சொல்றீங்க? இதை இன்னும் hotel room போட்டு யோசிச்சேன்னா நல்லா கொண்டு வரலாம்..

சுஜாதா எதோ book ல சொல்லி இருந்தாரு..உன் கதையை யாராவது திருடாம இருக்கணும்னா, உன் கதையை எழுதி உனக்கே நீ register post பண்ணிக்கோ..அது ஒரு record மாதிரி ஆயிடும்..அப்புறம் யாராவது திருடினாக் கூட case போட்டு easy ஆ ஜெயிக்கலாம்னாரு..ஆனா அவர் சொன்ன ஐடியாவை விட என்கிட்ட ஒரு better ஐடியா இருக்கு..உங்க கதையை யாரும் திருடாமல் இருக்கணும்னா..best கதையே எழுதாதீங்கோ¡¡¡¡¡¡¡...