நேற்று office விட்டு போகும் பொழுது cycyle ல் யோசித்துக் கொண்டே சென்றேன். ஒரு வரி கதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சுஜாதா ஒரு example கதை சொல்வார்:


உலகில் கடைசி மனிதன் மட்டும் உயிரோடிருந்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது!!


ஒரு வரியில் எத்தனை அழகான ஒரு திகில் கதை. இப்படி நம்மளும் எழுதிப்பாக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இங்கே: [உங்க தலையெழுத்தை யாரால மாத்த முடியும்? ஹிஹி..]


அதே முதியோர் இல்லம். அன்று என் அப்பா! இன்று நான் அப்பா!!


வாயில் நுரை பொங்கி வழிகிறது. அவள் அப்படிச் செய்திருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டே சாகிறேன்!


உள்ளே சென்றவன் வெறுப்புடன் வருகிறான். நான் எத்தனாவதாக நிற்கிறேன் என்று ஏழாவது முறையாக எண்ணிக் கொண்டேன்.


இந்த மூன்று கதைகளில் மூன்று களங்களைக் கையாண்டிருக்கிறேன் [அப்படி நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுதா?]

1. சோகம்
2. தோல்வி
3. நம்பிக்கை

இதில் எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு உங்கள் பாராட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்! இதில் நீங்கள் புதுசாய் ஏதாவது உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்![ஹிஹி..]