இந்த blog படிக்கிறதுக்கு முன்னாடி,

TV ல மெட்டி ஒலி, கோலங்கள் ஓடுதுன்னா better off பண்ணிட்டு வந்திருங்க..
grinderla மாவு போட்டு இருந்தீங்கன்ன better off பண்ணிட்டு வந்திருங்க..

இது கொஞ்சம் பெரிய POSTUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU..ஆமா!

நான் [இங்கு நான் என்பது நானும் என் நண்பர்களும்!!] ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 1 மணி நேரம், என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு போறது வழக்கம். [என் rediff blog படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்]

ஏன் போறேன்? [இப்போவாவது படிக்கலாம்னு தான்..]

நான்
AID என்ற ஒரு சமூக நலக் குழுவில் உள்ளேன். அதைப் பற்றி ஓரளவுக்கு விரிவாய் என் rediff blog எழுதியுள்ளேன்.

.................................................................................
.................................................................................
.................................................................................
[இதை புள்ளி புள்ளி என்று வாசித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..அப்படிப் போட்டா என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன்னு அர்த்தம்பா!! அடா அடா..]

சரி, இப்போ இருக்குற Education System நல்லா இருக்குன்னு சொல்றவங்க எல்லாம் கை தூக்குங்க! ................................................

sorry! நான் உங்க கூட பேசுற மாதிரி இல்லை. உங்க பேச்சு கா!

school நிஜம்மாவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தருதா என்ன? என்னைப் பொறுத்தவரை வரை இல்லைன்னு தான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை school என்பது குழந்தைகளை FAIL ஆக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது!! நீங்களே சொல்லுங்கள். இன்றைய குழந்தைகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூட பதில் சொல்ல முடிவதில்லை. அப்படித் தான் எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது இருக்கிறார்கள். பின்பு ஏன் அவர்கள் school சென்று FAIL ஆகிறார்கள்? ஏன் 1 ஒருவன் மட்டும் first rank வாங்குகிறான்?

நிறைய சிந்திக்கும் குழந்தைகளை நாம் பள்ளி என்னும் JAIL ல் அடைத்து அப்பாடா இனி அவன் படிச்சா அவன் நல்லா இருப்பான், நம்ம கடமை முடிஞ்சது என்று தான் இருக்கிறோம். நம்மை விட குழந்தைகளுக்கு புதுசாய் கற்பதில் ஆர்வம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படி நிறைய சிந்திக்கும் குழந்தையை ஒரு school ல் சேர்த்து சில புத்தகங்களை கையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறதோ அதை தான் நீ இனி படிக்க வேண்டும், இதைப் பற்றி தான் நீ சிந்திக்க வேண்டும் என்று ஒரு முட்டுக்கட்டை போடுகிறோம். குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, பள்ளயில் அவன் என்ன செய்தாலும் ஆசிரியர்:

1. ஹேய் [குழந்தைகள் என்ன ஆடு மாடா?] கத்தாதே..சத்தம் போடாதே!
2. அடுத்தவன்கிட்டே பேசாதே! எனக்கு pin drops silence இருக்கணும், ஆமா!! [அப்போ தானே அவருக்கு தூக்கம் வரும்]
3. வாயில விரலை வை! [அந்த குழந்தை அப்போ தான் கை சூப்புர பழக்கத்தை விட்ருக்கும், என்னடா வாத்தியாரே சொல்றாரேன்னு மறுபடியும் சூப்ப ஆரம்பிச்சிடும்!!]
4. bench மேல ஏறி நில்லு.
5. neel down போடு.
6. ஜன்னல் வழியா எட்டிப் பாக்கதே! தொலைச்சுடுவேன்!!
7. நீ எல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு!!

பின் குறிப்பு: நான் போகும் school ல் எந்தக் குழந்தையை எதைக் கேட்டாலும் கையைக் கட்டிக் கொள்ளும். நான் அதை எடுத்து விடுவேன். அது மறுபடியும் கட்டிக் கொள்ளும். [அப்படி அவர்களை பழக்கி விடுகிறார்கள்!]

இன்று இருக்கும் கல்வி முறை:

"ஒரு ஆசிரியர் இருப்பார், அவருக்குத் தான் எல்லாம் தெரியும். அவர் சொல்வதைக் மட்டும் கேட்க வேண்டும். அவர் அறிவை அப்படியே தூவி விடுவார். குழந்தைகள் catch பிடித்துக் கொள்ள வேண்டும்."

புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படியே அதை பரிட்சையில் வாந்தி எடுக்க வேண்டும்!! நன்றாக வாந்தி எடுப்பவன் சிறந்த மாணவன். சரியாய் வாந்தி எடுக்காதவன் மாடு மேய்க்கத் தான் லாயக்கு, tea ஆத்தத்தான் லாயக்கு!!

joy of learning

so, இந்த முறையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள். படிப்பு என்பதும் விளையாட்டாக இருக்க வேண்டும், LEARNING SHOULD BE FUN. INSTEAD OF TEACHING, WE SHOULD DISCUSS WITH THEM TO ARRIVE A CONCLUSION. அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்கலாம். இதனால் தான் நான் school க்குப் போகிறேன். நான் போகும் school மிகச் சிறியது. 2 அறை தான். 3,4 & 5 எல்லாம் ஒரே அறையில், அதற்க்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்ற அறையில். We have set of general syllabouse on all subjects. Science [Simple experiments], Maths, Social Science etc.,] We discuss Social Science with 5th Std students.

நான் முதலில் ஏதாவது விளையாடுவேன். [குழந்தைகளுக்கு நம் மீது நம்பிக்கை வர அவர்களுடன் விளையாட வேண்டும்] 4 joke சொல்வேன். நல்லா சிரிக்க வைப்பேன். கோணங்கித்தனம் பண்ணுவேன். கோமாளித்தனம் பண்ணுவேன்..பாட்டு பாடுவேன், விடுகதை கேட்பேன். [believe me, infosys puzzle க்கு answer பண்ணாங்க..i stemped!!] அப்போ தான் சரி இவன் நம்ம வாத்தியார் மாதிரி இல்லை, நல்ல ஆளா இருக்கான், இவன்கிட்டே பேசலாம் என்று நினைப்பார்கள். நாம் எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம், பள்ளியில் பேசவே மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒதுக்கப்பட்டவர்கள். [நானும் அப்படித்தான் இருந்தேன்!!]

That syllabous has some worksheets:

1. உன்னைப் பற்றி
2. உன் நண்பர்கள் பற்றி
3. உன்னிடம் உள்ள தனித்தன்மை
4. உன் குடும்பம்
5. உன் ஊர்

அவர்களைப் பற்றி அவர்களுக்குள்ளே யோசிக்கச் செய்வது. சமூகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. தன்னம்பிக்கை வளர்ப்பது. அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணர்த்துவது..இப்படிப் பல...

நான் school க்குள் நுழைந்தவுடன் அங்கே ஒரு குதூகலம்..ஒரு களிப்பு..ஒரு சந்தோஷம் எல்லாம் அவர்களுக்குள் வருவதை பார்க்கிறேன்.

1. எங்க வீட்டுக்கு வாங்க என்று ரோட்டில் என்னைப் பார்த்து என் கையைப் பிடித்து அந்த சின்ன பையன் இழுக்கும்போது..
2. office செல்லும் என்னை வழியில் பார்த்து chocolate எடுத்துக்குங்க, இன்னைக்கு எனக்கு birthday என்ற அந்த சின்ன பெண்ணைப் பார்க்கும்போது..
3. நான் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு கை கொடுக்கத் துடிக்கும் அந்த பிஞ்சுக் கரங்களை நினைக்கும்போது...
4. உங்களுக்காக கோயில்ல இருந்து திருநீரு கொண்டு வந்துருக்கேன், வச்சுக்குங்க என்று சொல்லும் போதும்..

என் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது!!