எனக்கு cinema வில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும், என்

வீட்டிலோ, சுற்றத்தாரோ யாருமே cinema வில் இல்லை. என் அப்பா, படம் பார்க்கும் பொழுது, படம்

இறுதியில் ஒரு கல்யாணத்தில் முடியவில்லை என்றால் படம் முடிந்ததாகவே ஒப்புக்கொள்ள மாட்டார்.

அப்படிப் பட்ட அவருக்கு நான் மகான். [sorry..மகனுக்கு பதிலா மகான்னு type அடிச்சுட்டேன்.

keyboardu கு கூட உண்மை தெரிஞ்சிருக்கு!] எனக்கு ஏதாவது கொஞ்சம் தெரியும் என்றால் அது

cinema தான்.

point க்கு வர்றேன்.
AKIRA KUROSAWA - சினிமாவின் தந்தை [தமிழ்], அவரோட சுய சரிதம் மதுரையில வாங்கினேன்.

அப்படி என்ன தான் படம் புடிச்சுருக்காரு பாப்போம்னு.

அந்த புத்தகத்தில் நான் கண்டது:

1. அகிரா japan ஐ சேர்ந்தவர். [உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்!]
2. சின்ன வயசுல மன நோயாளியா இருந்தாராம். [நான் தெளிவா இருந்தேன்..என்ன ப்ரயோஜனம்?]
3. அவர் ஒரு ஓவியரும் கூட. [நானும் தான்..இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..]
4. ஒரு நடிகையை மணம் முடித்தார்.
5. அவருடைய seven samurai உலக ப்ரசித்தி பெற்றது. [நான் அவருடைய எந்த படத்தையும் பார்த்ததில்லை]
6. "நீ எவ்வளவு சிரமப்பட்டு ஒரு காட்சியை எடுத்திருந்தாலும், அது பார்ப்பவருக்கு மகிழ்ச்சியை தராதென்றால், அதை கண்டிப்பாக வெட்டி விடு. படத்தொகுப்பு அறையில் நீ ஒரு கொலைகாரனாய் இரு." இது அவர் அவருடைய குரு யசாமோன் இடம் கற்ற பாடம். [ஒரு பெயராவது வாயிலே
நுழையுதா? இது correcta ன பெயரான்னு என்கிட்ட கேக்காதீங்க..i am not sure!]
7. சத்தியமா எனக்கு 'அகிரா' தவிற வேற எந்த பெயரும் ஞாபகம் இல்லை.

பின் குறிப்பு: இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்ததிலிருந்து என் வீட்டில் நண்பர்கள் என்னைத் தேடும் பொழுது 'அகிரா' எங்கே என்று தான் தேடுகிறார்கள்.

0 Responses